தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு கழகத்தின் சார்பில் விழுப்புரத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கில் தங்கி விளையாட்டு பயிற்சி மற்றும் கல்வி கற்கும் மாணவர்களை வெள்ளை அடிக்கவும், கட்டிட பணிக்கு வேலை செய்யவும் அதிகாரிகள் வற்புறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கி விளையாட்டு பயிற்சியுடன் கல்வி கற்பதற்கு ஏதுவாக மாவட்டம்தோறும் விளையாட்டு அரங்கம் மற்றும் விடுதி அமைத்து மாணவர்களை தங்கவைத்து அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் விழுப்புரத்தில் கூடைப்பந்து, ஓட்டப்பந்தயம், கபடி போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கும் அரங்கம் உள்ளது. இங்கு தங்கி படிக்கும் மாணவர்களை மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகன் அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை கொண்டு விளையாட்டு அரங்கிற்கு வெள்ளை அடிக்கவும், விளையாட்டு அரங்கில் நடைபெறும் கட்டிடப் பணிகளுக்கு இந்த மாணவர்களை ஈடுபடுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது மாணவர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. விளையாட்டு பயிற்சியில் பெரிய முன்னேற்றம் ஏற்படாத விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்காமல் இப்படி கட்டுமானப் பணிகளுக்கும் வெள்ளையடிக்கும் பணிகளுக்கும் பயன்படுத்துவது மாணவர்களை ஊக்கப்படுத்தல் விளையாட்டு ஆர்வம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…
This website uses cookies.