Categories: தமிழகம்

விமானங்களை தனியாரிடம் விற்றது போல ரயில்களையும் விற்க முயற்சி : SRMU தலைவர் குற்றச்சாட்டு!!

திருச்சி : விமானங்களை தனியாரிடம் விற்றது போல் ரயில்களையும் தனியாரிடம் விற்க முயற்சிப்பதாக அகில இந்திய எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எஸ் ஆர் எம் யூ திருச்சி கோட்டம் தொடர்வண்டி மேலாளர்கள் மாநாடு திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள நமச்சிவாய அரங்கத்தில் எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் எஸ்.ஆர்.எம்.யூ அகில இந்திய தலைவர் ராஜாஸ்ரீதர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இம்மாநாட்டில் நிர்வாகிகள் மணிவண்ணன், பழனிவேல் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.ஆர்.எம்.யூ அகில இந்திய தலைவர் ராஜாஸ்ரீதர் கூறியதாவது :- ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. ரயில்வே தனியார்மயமாக்கப்பட்டால் ரயில்வே தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு குறைக்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். ஏழை, எளிய பொதுமக்களுக்கும் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

புதிய ஓய்வூதிய திட்டம் ஓய்வூதியம் இல்லாத திட்டமாக இருக்கிறது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லாத நிலையை ஒன்றிய அரசு உருவாக்குகிறது. எனவே தனியார் மயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், புதிய ஓய்வூதிய திட்ட பாதிப்புகள் குறித்தும் ரயில்வே ஊழியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஒன்றுதிரட்ட எஸ்.ஆர்.எம்.யூ முயற்சித்து வருகிறது. அதற்காக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். பிரச்சாரத்திற்கு இறுதியில் போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம்.

பிரதமரும், ரயில்வே அமைச்சரும் ரயில்வே தனியார் மயமாக்கப்படாது என்கிற பொய்யை தொடர்ந்து கட்டமைத்து வருகிறார்கள். இன்று அரசிடம் விமானத்துறை இருக்கிறது. ஆனால் விமானங்கள் அரசிடம் இல்லை அது தனியாரிடம் இருக்கிறது. அது போலவே ரயில்களையும் தனியாரிடம் விற்க முயற்சிக்கிறார்கள்.

அரசிடம் நிதி ஆதாரம் இல்லை என ஒன்றிய அரசு கூறுவது மோசடியான வாதம். கார்ப்பரேட்டுகளுக்கும், பெரு முதலாளிகளுக்கும் நிதி கொடுக்க அரசிடம் பணம் இருக்கிறது. ஆனால், ஏழை, எளிய மக்களுக்கு நிதி கொடுக்க பணம் இல்லை என கூறுவது மோசடியானது.

மின்சார மசோதாவை ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.இதனால் இலவச மின்சார பெறும் எளிய மக்கள், விவசாயிகள், விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இது மின்சார துறையை தனியார்மயமாக்குவதற்கான முதல் கட்ட முயற்சி. இது போல ஒவ்வொரு துறையும் அவர்கள் தனியார்மயமாக்கி இறுதியில் ரயில்வே துறையையும் கைவைக்க பார்க்கிறார்கள். அதனை எதிர்த்து ரயில்வே ஊழியர்கள் கடுமையாக போராடி அதில் வெற்றி பெறுவோம்.

மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். ஆனால் அந்த மாநிலத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து தர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு தர மறுக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த நினைத்தாலும் ஒன்றிய அரசு அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

ரயில்வே தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் வட மாநிலங்களில் அதிக பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டு ஏராளமானோர் பயிற்சி பெறுகிறார்கள். அதே போல அவர்கள் அவர்களின் தாய் மொழியில் தேர்வெழுத வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. அதன் காரணமாகவே ரயில்வே துறையில் அதிகமான வட மாநிலத்தவர் பணியில் இணைகிறார்கள், என தெரிவித்தார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

1 hour ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

2 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

2 hours ago

AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…

3 hours ago

உச்சக்கட்ட சந்தோஷத்தில் அஜித்… திக்குமுக்காடிய ஆதிக் : GBU கொடுத்த சர்ப்ரைஸ்!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…

3 hours ago

என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…

தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…

4 hours ago

This website uses cookies.