Categories: தமிழகம்

கிறிஸ்தவ ஆலயத்தில் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு!!

கோவை : கோவையில் உள்ள தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை மர்ம நபர்கள் சேதப்டுத்தினர் அதை முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி தேவாலயத்தின் வாயிலில் உள்ள செபஸ்தியர் சிலையை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சேதப்படுத்தி சென்றனர். சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிரினிட்டி தேவாலயம் மற்றும் பள்ளி அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தின் வாயிலில் புனித செபஸ்தியர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தற்பொழுது அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வின்போது மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், கழக அமைப்பு செயலாளரும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான தாமோதரன் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

9 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

9 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

11 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

11 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

12 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

12 hours ago

This website uses cookies.