ஊடகவியாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் எழுத்தாளர் வெண்பா மாதேயி ஆகியோர் Sting Operation எனக் கூறி அண்மையில் அடுத்தடுத்து வெளியிட்டு வரும் வீடியோக்கள் தமிழக ஊடகத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வீடியோக்களில் தமிழகத்தில் பிரபலமான சில மீடியாக்களின் நெறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அரசியல் தொடர்பான விஷயங்களையும், செய்தித்துறையில் நடக்கும் சில ரகசியங்களையும் வெளியிட்டனர்.
அந்த வகையில் நேர்காணல் மூலம் பிரபலமான ஆதன் மீடியாவைச் சேர்ந்த நெறியாளர் மாதேஷின் வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, மாதேஷின் நிலை என்னவானது என்று தெரியாமல் இருந்தது. அவரது நேர்காணல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும், அவரது ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் மாதேஷ் குறித்து கேள்விகளையும், மீம்ஸ்களையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், தனது தவறு குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்து மாதேஷ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது தவறை தான் உணர்ந்து கொண்டதாகவும், மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் தன்னை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் கண்கலங்கியபடி அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இதனை பார்க்கும் நெட்டிசன்கள், நடந்தது நடந்தாகிவிட்டது, மேற்கொண்டு தொடர்ந்து உங்களின் பணியை மேற்கொள்ளுமாறு அவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
This website uses cookies.