Categories: தமிழகம்

வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்.. பட்டப்பகலில் கும்பல் அட்டகாசம் : அழைத்தும் அலட்சியம் காட்டிய POLICE… பரபர பின்னணி!

வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்.. பட்டப்பகலில் கும்பல் அட்டகாசம் : அழைத்தும் அலட்சியம் காட்டிய POLICE… பரபர பின்னணி!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு காந்தி கிராமம் ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் மனோகரன். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தனியார் சிமெண்ட் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத் தேவைக்காக கடந்த 2022ம் ஆண்டு 23 லட்ச ரூபாய்க்கு வீட்டு பத்திரத்தை எழுதி கொடுத்து அடமான கடனாக தனியார் நிதி நிறுவனரிடம் பெற்றுள்ளார்.

முறையாக வட்டியும், அசலும் திரும்ப செலுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது. வழக்கறிஞரும் நிதி நிறுவன நடத்தி வரும் ரகுநாதன் மற்றும் இளங்கோ அவர்களிடம் வீட்டு பத்திரத்தை திரும்ப கேட்ட போது மேலும், 10 லட்ச ரூபாய் வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து கரூர் உரிமையியல் நீதிமன்றத்தில் மனோகரன் வழக்கு தொடர்ந்து, இரண்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் பத்துக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் மனோகரன் வீட்டிற்கு வந்து கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மனோகரன் அளித்த புகாரின் அடிப்படையில் பசுபதிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனோகரன் தனது வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காண்பித்து ரவுடிகள் பட்டப்பகலில் தங்கள் குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிட்டு பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர்.

இதனை தடுக்க முற்பட்டபோது, திடீரென கல்வீசி தாக்கியதாகவும், அப்பொழுது வீட்டின் முன் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி நொறுக்கப்பட்டது. வீட்டை சேதப்படுத்தினர் மேலும் ஏற்கனவே இது போன்று கடந்த 12ஆம் தேதி நள்ளிரவில் வீட்டினுள் அத்துமீறி நுழைய முயன்றவர்களை சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் விரட்டினோம்.

அப்போது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மீண்டும் இது போன்ற நேற்று மதியம் ஒரு மணி அளவில் பத்திற்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குதல் நடத்தினர் நேற்று 3 மணி நேரம் தாமதமாக வந்த காவல்துறையினர் புகாரை பெற்றுக் கொண்டு தற்பொழுது வரை எஃப் ஐ ஆர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதியப்படாத நிலையில் நேற்று இரவு மனோகரன் பசுபதிபாளையம் காவல்துறையினரிடம் கேட்டபோது இன்று மதியம் மூன்று மணிக்கு வாருங்கள் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர் இதனால் குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்தார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…

55 minutes ago

தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!

காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…

2 hours ago

டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!

டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…

3 hours ago

வெறி நாய் கடிக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரை மாய்த்த சோகம் : கோவை அரசு மருத்துவமனையில் ஷாக்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…

3 hours ago

பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் ரெடி மாமே…வெளிவந்த குட் ‘பேட் அக்லி’ அப்டேட்.!

பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…

3 hours ago

விஜய்யிடம் பேசுவது இல்லை.. அவர் படத்தை பார்ப்பதும் இல்லை : பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்!

நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…

4 hours ago

This website uses cookies.