விவசாய நிலங்களில் இயங்கும் கல் குவாரிகள்.. நடவடிக்கை எடுக்க கோரி கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் மனு!
விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை தடுத்த நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், நாங்கள் பொள்ளாச்சி மற்றும் நனைமலை பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் நடத்திவருகிறோம்.
மேலும் முறையாக கனிமம் மற்றும் சுரங்கத்துறை மற்றும் வணிகவரித்துறை GST பெற்று தொழில் செய்து வருகிறோம். மேலும் ஆனைமலை சார்ந்த பகுதிகளில் நில உரிமையாளர்கள் துணையுடன், கேரளா பகுதிகளைச் சார்ந்த சில சமூக விரோதிகள் ஆனைமலை, ஒடையகுளம். செம்மணாம்பதி, கோவிந்தாபுரம் மற்றும் சில பகுதிகளில் சட்ட விரோதமாக விவசாய நிலங்களில் உள்ள பாறைகளை வெடி வைத்து உடைத்து கேரளா மாநில பகுதிகளுக்கு டிப்பர் லாரிகள் மூலமாக விற்பனை செய்துவருகின்றனர்.
இதனால் அரசுக்கு பெரும் வருமான இழப்பீடு ஏற்படுவதோடு முறையாக அனுமதி பெற்று தொழில் செய்துவரும் நாங்கள் பெரும் பாதிப்படைந்து உள்ளோம்.
எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரிகளை தடுத்துநிறுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.