விவசாய நிலங்களில் இயங்கும் கல் குவாரிகள்.. நடவடிக்கை எடுக்க கோரி கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் மனு!
விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை தடுத்த நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், நாங்கள் பொள்ளாச்சி மற்றும் நனைமலை பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் நடத்திவருகிறோம்.
மேலும் முறையாக கனிமம் மற்றும் சுரங்கத்துறை மற்றும் வணிகவரித்துறை GST பெற்று தொழில் செய்து வருகிறோம். மேலும் ஆனைமலை சார்ந்த பகுதிகளில் நில உரிமையாளர்கள் துணையுடன், கேரளா பகுதிகளைச் சார்ந்த சில சமூக விரோதிகள் ஆனைமலை, ஒடையகுளம். செம்மணாம்பதி, கோவிந்தாபுரம் மற்றும் சில பகுதிகளில் சட்ட விரோதமாக விவசாய நிலங்களில் உள்ள பாறைகளை வெடி வைத்து உடைத்து கேரளா மாநில பகுதிகளுக்கு டிப்பர் லாரிகள் மூலமாக விற்பனை செய்துவருகின்றனர்.
இதனால் அரசுக்கு பெரும் வருமான இழப்பீடு ஏற்படுவதோடு முறையாக அனுமதி பெற்று தொழில் செய்துவரும் நாங்கள் பெரும் பாதிப்படைந்து உள்ளோம்.
எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரிகளை தடுத்துநிறுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.