ஃபெஞ்சல் என பெயரிடப்பட்ட புயல், நேற்று அதிகாலை மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடந்தது. பொதுவாக புயல் கரையை கடந்த பிறகு மழையின் தீவிரம் குறைவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி ஆகவில்லை. மாறாக மழை அதிகரித்தது.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, மற்றும் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் மழை மிக அதிகமாக பதிவாகியது. கிருஷ்ணகிரியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 51 செ.மீ அளவிற்கு மழை பெய்தது. இதனால் அரூர் மற்றும் ஊத்தங்கரை போன்ற பகுதிகளில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது.
இதையும் படியுங்க: மருத்துவ மாணவியின் உயிரை பறித்த புரோட்டா : கோவையில் சோகம்!
விழுப்புரம் மாவட்டத்தில் 50 செ.மீ மழை பதிவாகியதால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலியில் வெள்ளம் பாய்ந்தது. அரசூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்து ஓடியது. இதன் விளைவாக, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் அரசூருக்கு முன்பே நிறுத்தப்பட்டன.
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த வாகனங்களும் பாதியில் நிறுத்தப்பட்டு மாற்று வழிகளுக்கு மாற்றப்பட்டன. ரயில் போக்குவரத்தும் விக்கிரவாண்டியுடன் நிறுத்தப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் காட்பாடி மற்றும் அரக்கோணம் வழியாக இயக்கப்பட்டன.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.