Categories: தமிழகம்

‘மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பு…தவறிழைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை’: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி..!!

தஞ்சை: பள்ளி வாகனங்கள் இயக்குவது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பள்ளி நிர்வாகங்கள் தான் பொறுப்பு. அதிலிருந்து தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார்.

தஞ்சையில் சமூக நலத்துறை சார்பில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்தார். அனைவருக்கும் வளையல் அணிவித்து, மாலை அணிவித்து, சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வளைகாப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று நடத்திவைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி அறிக்கையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக சமுதாய வளைகாப்பு 300 பெண்களுக்கு தற்பொழுது நடைபெற்றது. பெண்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங் கப்பட்டது.

தமிழ்நாட்டில் பழுதடைந்த 10,030 பள்ளி கட்டிடங்கள் இடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் பெயரில் 5 ஆண்டுகளில் 18,000 வகுப்பறைகள் 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைகள் மட்டுமல்லாமல் ஆய்வுகூடம், சமையல் கூடம் கழிவறை உள்ளிட்ட அனைத்தும் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட உள்ளது.

பள்ளிப் பேருந்தை இயக்க வேண்டும் என்றால் அதற்காக தனியாக அரசாணை உள்ளது. அந்த விதிமுறையை பின்பற்றி தான் பேருந்து இயக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் வரும் மாணவர்களை உதவியாளர்கள், இரண்டு ஆசிரியர்கள் பாதுகாப்பாக இறக்கி வகுப்பறை வரை பாதுகாப்புடன் செல்வதை உறுதி செய்யவேண்டும், இதை முறையாக பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் தகுந்த ஆலோசனை வழங்கப்படும் என்றார். மாணவர்களின் ஒழுங்கீனங்களை சரி செய்ய பின்தங்கிய பகுதிகளில் இருந்து வரும் 2 இலட்சம் மாணவர்களுக்கு 1100 ஆசிரியர்கள் மூலம் கவுன்சில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

1 hour ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

1 hour ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

2 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

2 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

3 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

3 hours ago

This website uses cookies.