திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி – அம்பிகாபதி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 17 வயதில் சின்னதுரை என்ற மகனும், 14 வயதில் சந்திரா செல்வி என்ற குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், சின்னத்துரை அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.
மாணவர்களுக்கிடையே ஜாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையில் சின்னத்துரை ஒரு வாரம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர், சின்னதுரையின் பெற்றோரை தொடர்புகொண்டு பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில், பள்ளிக்குச் சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது தன்னை சில மாணவர்கள் ஜாதி ரீதியாக கேலி, கிண்டல் செய்வதால் பள்ளிக்கு வர விரும்பவில்லை என தெரிவித்ததையடுத்து, இதைகேட்ட ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் அடங்கிய கும்பல் இரவு 10 மணியளவில் சின்னதுரையின் வீட்டிற்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்து சின்னதுரையை சரமாரியாக வெட்டிய நிலையில், தடுக்க முயன்ற சின்னத்திருக்கையின் தங்கையையும் வெட்டியுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சின்னத்துரை மற்றும் சந்திரா செல்வி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இந்த ஆண்டு வைக்கம் போராட்டம் 100 ஆண்டுகளை கடந்த ஆண்டு. மிகப்பெரிய ஆளுமைகள் எல்லாம் மனிதநேயம் குறித்து பேசியிருந்தனர். ஆனால், இந்த மனிதநேயம் என்பது கொரோனா காலகட்டத்தில் தான் பலருக்கு புரிந்தது.
மாணவர்களே நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு நீங்கள் போகும்போது, உங்களது புத்தியை கூர்மைபடுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் ஆசைப்படுகிறோம், உங்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க வேண்டும் என ஆசைப்படவில்லை. தாக்கப்பட்டுள்ள தம்பி மற்றும் தங்கை இருவரையும் பாதுகாப்பான ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்த்து படிக்க வைப்பேன். அது என்னுடைய கடமை.
உங்கள் அண்ணாக சொல்கிறேன். அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள்; இதுபோன்ற சம்பவம் இனியும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; ஒரு அண்ணனாக மாணவர்களிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான் என தெரிவித்துள்ளார்.
மாற்றுக் கட்சியில் இருந்து காரில் வந்தாலும் அல்லது ஹெலிகாப்டரில் வந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
லண்டனில் இளையராஜாவின் சிம்பொனி இசை அரங்கேற்றப்பட்டு, முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளார். லண்டன்: சிம்பொனி இசையை…
"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…
இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…
This website uses cookies.