Categories: தமிழகம்

தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவன் தற்கொலை : கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை!!

விழுப்புரம் : தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விடுதியில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள மயிலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் சதீஷ் (வயது 23). இவர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு மேல் படிப்பான மத்திய அரசின் 3 மாத காலமான பட்டைய படிப்பான Deen dayal Upadhyay Gramin Kaushalya Yojana படிப்பை அக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மாணவர் விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.

ஆத்தூர் அருகே உள்ள சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்காக சென்றுவிட்டு நேற்று மாலை 6 மணிக்கு கல்லூரி விடுதிக்கு. திரும்பியுள்ளார். விடுதியில் தன்னுடன் தங்கி உள்ள அறை நண்பர்களுடன் சரிவர பேசவில்லை என கூறப்படுகிறது.

இன்று காலை சதீஷ் வகுப்பிற்கு செல்லாமல் அறையிலேயே தனியாக இருந்துள்ளார். வகுப்பு முடிந்து மதியம் அவரது அறைக்கு திரும்பிய நண்பர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கதவு திறந்து இருந்த நிலையில் லுங்கியால் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனே இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கல்லூரி நிர்வாகம் மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலம் இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி மற்றும் போலீசார் இறந்த சதிஷின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சதீஷின் செல்போனை கைப்பற்றி அதில் ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

1 day ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

1 day ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

2 days ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

2 days ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

2 days ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

2 days ago

This website uses cookies.