Categories: தமிழகம்

‘ராட்சசி’ பட பாணியில் தலைமையாசிரியருக்கு ஆதரவாக குவிந்த மாணவர்கள், பெற்றோர்கள் : மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

திருச்சி : மண்ணச்சநல்லூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை பணி இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் சரவணவேல் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து தலைமை ஆசிரியர் பணி இடமாற்றம் செய்யபட்டதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் சரவணவேல் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் நன்கு படிப்பில் தேறி வருகின்றனர்.

மேலும் அவர் பள்ளி நிர்வாகத்தில் அவர் நேர்மையாகவும் உரிய கண்டிப்புடன் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இதனால் எங்கள் பிள்ளைகள் படிப்பில் சிறப்பாக முன்னேறி வரும் இந்த சூழலில் தலைமை ஆசிரியரை பணி இடமாற்றம் செய்வதை ஏற்றுகொள்ள இயலாது எனவே அவரை பணி இடமாற்றம் செய்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கூறி மாணவர்களின் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மண்ணச்சநல்லூர் – துறையூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என கூறி அமைதி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!

ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…

17 minutes ago

EMI வசூலிக்க சென்ற நபர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. விசாரணையில் பகீர் பின்னணி!

அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

41 minutes ago

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…

2 hours ago

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…

2 hours ago

இருதரப்பும் பேச என்ன இருக்கு? – உச்ச நீதிமன்ற உத்தரவு.. சீமான் ரியாக்‌ஷன்!

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…

2 hours ago

கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!

100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…

3 hours ago

This website uses cookies.