கொங்கராயகுறிச்சியில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் 200 மீட்டர் தூரத்தில் உள்ள கழிவறைக்கு மாணவ மாணவிகளே தண்ணீர் கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் அரசு உதவிபெறும் டிடிடிஏ தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, அரபாத்நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 60 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த மாணவிகளை தினம்தோறும் சுழற்சி முறையில் பள்ளி வளாகங்களை பெருக்க வைப்பது, குப்பைகளை பள்ளியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள குப்பை தொட்டியில் கொண்டு போட வைப்பது போன்ற வேலைகளை பள்ளி தலைமை ஆசிரியர் செய்ய வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.
மேலும் பள்ளி வளாகத்தில் கழிவறை இல்லாததால் பள்ளியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள கழிவறைக்கு தினம்தோறும் மாணவ மாணவிகளை தண்ணீர் கொண்டு செல்ல வற்புறுத்துவது, ஆசிரியர்களின் கழிவறைக்கும் தண்ணீர் கொண்டு செல்ல வற்புறுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து மாணவ மாணவிகள் தங்களின் வீட்டில் கூற கூடாது எனவும் ஆசிரியர்கள் கண்டிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவ மாணவிகள் குப்பைகளை பெருக்குவது, கழிவறைக்கு தண்ணீர் கொண்டு செல்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய 100 நாட்கள் பணியாளர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என நீதிமன்றம் மற்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அந்த விதிகளை பள்ளி நிர்வாகங்கள் காற்றி பறக்கவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
This website uses cookies.