Categories: தமிழகம்

கல்லூரி விடுதியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவிகள்…. ஸ்பாட்டுக்கு சென்ற போலீசார் : விசாரணையில் அதிர்ச்சி!!

வேடசந்தூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரியில் மாணவ மாணவிகள் திடீர் மயக்கம் அடைந்த நிலையில் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

மேலும் இதர மாவட்டங்களான கரூர், சேலம், கோயம்புத்தூர், கடலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

நேற்றைய தினம் சுமார் நித்திய குமார், ஷோபனா, கோகுல் நந்தினி, சுவேதா, சங்கரி, தமிழரசி உள்ளிட்ட 13 மாணவ மாணவிகள் திடீரென மயக்கமடைந்து வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆர்டிஓ சிவக்குமார் அரசு மருத்துவமனையில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது மாணவ மாணவிகள் கூறுகையில் காலை 7 மணி அளவில் வகுப்புகள் தொடங்க படுவதாகவும் காலை உணவு ஒன்பது முப்பது மணி அளவில் கொடுக்கப்படுவதால் பசியில் மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்தனர்

மேலும் இதுகுறித்து ஆர்டிஓ விடம் கேட்டபோது இது சம்பந்தமாக வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், கல்லூரியில் முறையான விசாரணை நடத்தப்பட்டு ஏதேனும் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்

உணவு வழங்க தாமதமானதால் மாணவ மாணவிகள் பசியில் மயங்கி விழுந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

7 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

8 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

9 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

9 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

9 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

10 hours ago

This website uses cookies.