ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (37) ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி சிவகாமி (32), வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு திவ்யஸ்ரீ (10) என்ற மகளும், அஸ்வந்த் (8) என்ற மகனும் உள்ளனர்.
இதையும் படியுங்க: அஜித்திடம் அத்துமீறிய ரசிகர்.. கடுப்பான AK.. வைரலாகும் வீடியோ!!
முன்தினம் இரவு பணி முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சசிக்குமார், சாப்பிட்டுவிட்டு அறைக்குள் சென்று தூங்கினார். ஆனால்,翌நாள் காலை 8 மணிக்கும் மேல் அவர் அறை கதவை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த சிவகாமி கதவை திறந்தபோது, சசிக்குமார் மின் விசிறியின் கொக்கியில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதைப் பார்த்த சிவகாமி திடுக்கிட்டு அலறினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, சசிக்குமாரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்தவர்கள், சசிக்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உடனடியாக அறச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சசிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சசிக்குமார் தற்கொலைக்கு காரணமாக குடும்ப தகராறா, பணிச்சுமையா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்துகொண்டது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.