தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நாட்டில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 க்கு மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவுநீர் ஓடையை சுத்திகரிப்பது குறித்து காங்கிரஸ் கவுன்சிலரிடம் கேள்வி எழுப்பிய வாலிபரை தகாத வார்த்தைகளால் திட்டி கொடுமையாக தாக்கியுள்ளனர்.
அந்த சம்பவத்திற்கு தமிழக காவல்துறையினர் இரண்டு நாட்களாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை மாறாக கேள்வி கேட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
குற்றவாளிகளை பாதுகாப்பது தமிழக காவல்துறைக்கு அழகல்ல. காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.
மேலும் படிக்க: செல்போனுக்கு சம்மன்.. TTF வாசனுக்கு வந்த சோதனை : நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக செயல்படுகிறதா இல்லையா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது 2014 ஆம் ஆண்டு பத்தாவது இடத்தில் இருந்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளோம்.
2027க்குள் மூன்றாவது இடத்தை அடைந்து விடுவோம் என பிரதமர் மோடி கொடுத்துள்ள கேரண்டி நிச்சயம் நாம் அதை அடைவோம் என்று கூறினார். தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.