Categories: தமிழகம்

காதலுக்கு பச்சைக்கொடி.. நிச்சயம் முடித்த கையோடு சுற்றுலா வந்த ஜோடி : தனியார் விடுதியில் காதலர் திடீர் மரணம்.. போலீசார் விசாரணை!!

வேலூர் : திருமண நிச்சயதார்த்தம் செய்த வேலூரை சார்ந்த மென்பொறியாளர் புதுப்பெண்ணுடன் புதுச்சேரிக்கு வந்த புதுமாப்பிள்ளை திடீர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். சென்னையில் மென்பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணான இளவேனில் என்பவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

காதலை ஏற்ற பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி இருவரும் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

கடலூர் சாலையில் உள்ள நோனங்குப்பம் படகு குழாம் அருகே தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் 2 ம் தேதி கடற்கரைக்குச் சென்று விட்டு விடுதியில் இரவு தங்கிருந்தபோது, காலை 9 மணியளவில் ரமேஷுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு விடுதிக்கு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 4.30 மணி அளவில் ரமேஷ் மீண்டும் மயங்கி விழுந்துள்ளார். ஹோட்டல் நிர்வாகத்தினருடன் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார் இளவேனில். பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

திருமண நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்ய உள்ள நிலையில் சுற்றுலா வந்த புதுமாப்பிள்ளை மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

3 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

4 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

5 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

5 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

7 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

7 hours ago

This website uses cookies.