ஈரோடு : புஞ்சை புளியம்பட்டி அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி நம்பியூர் செல்லும் சாலையில் உரச்சாலை என்ற பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்படாத குப்பைக்கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் யாரோ தீயை பற்ற வைத்துள்ளனர். குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடந்த இடம் என்பதால் பற்றிய தீ மளமளவென எரிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதை கண்ட அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
This website uses cookies.