கோவையில் இரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு கெமிக்கல் வெடித்து சிதறும் பரப்பான காட்சி வெளியாகியுள்ளது.
கோவை சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு பகுதியில் ஆர்பிகே இரசாயன (கெமிக்கல்) தொழிற்சாலை செயல்ப்பட்டு வருகிறது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணி செய்து கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அங்கு இருந்த கெமிக்கல் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் ஏற்பட்ட தீ அங்கு இருந்த இரசாயனம் முழுவதும் பரவி மல மலவென தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்த இரண்டு கெமிக்கல் ட்ரம் வெடித்து சிதறியது.இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். தற்போது வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் தொழிற்சாலை முழுவதும் எரிந்து நாசமாகியது.
அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலையை விட்டு வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.