கோவை வந்த ஆம்னி பேருந்தில் திடீர் தீ : எலும்புக்ககூடான பேருந்து.. உயிர்தப்பிய பயணிகள்!
Author: Udayachandran RadhaKrishnan22 July 2024, 1:03 pm
திருவண்ணாமலை இருந்து 30 பயணிகளுடன் கோவை நோக்கி ஆகாஷ் டிராவல்ஸ் என்ற குளிர்சாதன வசதி கொண்ட தனியார் பேருந்து நேற்று அதிகாலை 6.00 மணி அளவில் கோவை சித்திரா அருகே வந்து கொண்டு இருந்தது.
இந்தப் பேருந்தை ஓட்டுனர் தாஸ் என்பவர் ஓட்டி வந்தார். அப்பொழுது திடீரென புகை வருவதை கண்ட ஓட்டுநர் தாஸ் உடனடியாக சாலை ஓரமாக பேருந்து நிறுத்தினார்.
அதில் இருந்த பயணிகளை உடனடியாக கீழே இறங்குமாறு கூறினார். உறங்கிக் கொண்டு இருந்த பயணிகள் பேருந்தில் தீ பற்றி எரிவதை பார்த்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பேருந்து விட்டு இறங்கினர். உடனடியாக பேருந்தில் இருந்த 30 பயணிகள் பத்திரமாக கீழே இறங்கின உயிர் தப்பினர். பின்னர் இது குறித்து பீளமேடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இது குறித்து பீளமேடு காவல் துறையினர் டீசல் கசிவு அல்லது குளிர்சாதன பெட்டியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.