மின் கசிவு காரணமாக எரிந்து சாம்பலான சுற்றுலா பேருந்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 24 பயணிகள்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா சமீபத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு ஏராளமான அளவில் சுற்றுலா பயணிகள் தினமும் செல்வது வழக்கம். இயற்கை அழகை ரசிப்பதற்காக அங்கு தினமும் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
இந்த நிலையில் இரவு அரக்கு பகுதியில் தங்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு 24 பயணிகள் தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர்.
அவர்கள் பயணித்த பேருந்து விஜயநகரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது மலைப்பாதையில் திடீரென்று தீப்பற்றி எறிய துவங்கியது.
எனவே பேருந்து டிரைவர் நிறுத்திவிட்டார். இந்த நிலையில் பேருந்து முழுவதுமாக எரிய துவங்கியது. எனவே பயணிகள் அலறி அடித்து பேருந்தில் இருந்து இறங்கி உயிர்த்தப்பினார்.
ஆனால் பயணிகளின் உடைமைகளும் தீக்கிரையாகி விட்டன. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்பு கூடாகி விட்டது.
தீ விபத்திற்கான காரணம் மின்கசிவு ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.