மதுரையில் தொடர்ந்து பெய்து வரும் கனமனையிலாலும் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மதுரை விரகனூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன, அதில் ஒருவர் 10 வயது சிறுவன் விஜய் விஜய் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயன்று வருகிறார்.
இந்நிலையில் சிறுவன் விஜய் பள்ளி விடுமுறையை முன்னிட்டு குளிப்பதற்காக தனது நண்பர்களுடன் மதுரை விரகனூர் வைகை ஆற்று பகுதிக்கு சென்றுள்ளார்,
ஆற்று நீரில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியுள்ளார்.
சிறுவன் ஆற்றின் நீரில் மூழ்கியதை கண்ட அவரது சக நண்பர்கள் பயந்து வெளியே வந்து அப்பகுதியில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: திண்டுக்கல்லில் புது வீட்டில் குடியேறிய பாமக வேட்பாளர் : வீடு மாறியது ஏன் என திமுக அரசை விளாசி புது விளக்கம்!
உடனடியாக தெப்பக்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மதுரை அனுப்பானடியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு நீரில் மூழ்கி இருந்த சிறுவனை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்கும் போதே சிறுவனின் உயிரிழந்துள்ளார்.
பள்ளி விடுமுறையில் நண்பர்களுடன் வைகை ஆற்றில் குளிக்க சென்ற 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.