பிரதமர் வருகையின் போது திடீர் சாலை மறியல்.. மோடியை பார்க்க விடாமல் தடுக்க திமுகவினர் நடத்திய நாடகம் : பாஜக குற்றச்சாட்டு!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் கடந்த நான்கு ஆண்டுகளாக கோவில் திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட இருந்தது.
இந்த நிலையில், அந்த கோவிலில் வழிபாடு செய்யும் ஒரே சமூகத்தை சேர்ந்த இரண்டு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், சாயல்குடி காவல்துறை பாரபட்சமாக ஒரு தரப்புக்கு மட்டும் ஆதரவாக நடவடிக்கை எடுப்பதாக கூறியும் மேலும் கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் தடுப்பதாக கூறியும், அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
குறிப்பாக,சாயல்குடி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சல்மோன் என்பவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு மணி நேரமாக சாலை மறியல் போராட்டமானது நடந்தது. இதனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் சாலையின் இரு புறங்களிலும் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் அணிவித்து நின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று வந்துள்ள நிலையில், தற்போது நடந்த இந்த சாலை மறியல் போராட்டமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அங்கு வந்த கடலாடி வட்டாட்சியர் போராட்டம் நடத்திய பொதுமக்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், ராமேஸ்வரம் – கன்னியாகுமரி சாலையில் நடந்த இந்தப் போராட்டத்தால், பிரதமர் மோடியை வரவேற்க ராமேஸ்வரம் செல்வதற்காக பாஜகவினர் செல்லும் வழியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தால், கட்சியினரின் வாகனங்களும் தேங்கி நின்றன.
திட்டமிட்டே திமுக அரசு மோடியை பார்க்க விடாமல் தடுப்பதற்காக இந்த போராட்டத்தை இரண்டு மணி நேரமாக நீடிக்க விட்டதாக கட்சியினர் முனுமுனுத்தபடியே அங்கிருந்து கடந்து சென்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.