Categories: தமிழகம்

திமுக பிரமுகர் மரணத்தில் திடீர் திருப்பம் : வீட்டு வேலைக்காரனுடன் உல்லாசமாக இருக்க மனைவியே கொலை செய்தது அம்பலம்!!

நாகை : வீட்டு வேலைக்காரனுடன் உல்லாச தொடர்பை தவிர்க்க முடியாத மனைவி திமுக பிரமுகரை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அருகே வேட்டைக்காரனிருப்பு பகுதியில் உள்ள சடையன்காடு பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் திமுகவில் ஒன்றிய குழு உறுப்பினராகவும் திமுக கிளை செயலாளருமாக உள்ளார்.

இவர் தனது மனைவி சூர்யாவுடன் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் தேவேந்திரனுக்கு மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார்.

திருச்சியில் உள்ள வெல்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் கடந்த டிசம்பர் 15ம் தேதி குணமடைந்த பின் வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால் கடந்த ஜனவரி 4ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனைக்கு சென்ற போது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து தேவேந்திரனை அவரது உறவினர்கள் திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 6ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை வேட்டைக்காரனிருப்புக்கு கொண்டு வந்து மயானத்தில் வைத்து உறவினர்கள் இறுதி சடங்கு செய்துள்ளனர்.

கணவர் உயிரிழந்த துக்கம் கூட இல்லாமல் மனைவி சூர்யா தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இதை கவனித்த உறவினர் சதீஷ்கண்ணா என்பவர் சந்தேகமடைந்து சூர்யா பேசிக்கொண்டிருந்த தேவேந்திரன் செல்போனை சோதனை செய்துள்ளார்.

அப்போது தேவேந்திரன் வீட்டில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருடன் சூர்யா அதிக நேரம் பேசியதை கண்டறிந்தார். பின்னர் உறவினர்கள் சந்திரசேகரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சூர்யாவுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் துருவி துருவி நடத்திய விசாரணையில், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சூர்யா மற்றும் சந்திரசேகர் சேர்ந்து தேவேந்திரனுக்கு சாப்பிட்ட உணவில் எலி மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட தேவேந்திரன் உயிரிழந்தார்.

இதையடுத்து வேலைக்காரன் சந்திரசேகரனையும், கணவனை கொலை செய்த சூர்யாவையும் கைது செய்த போலீசார் வேதாரணியம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து இருவரையும் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

விட்டு வேலைக்காரனுடன் உல்லாசம் அனுபவிக்க தாலி கட்டிய கணவனை விஷம் வைத்து கொன்ற சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
……

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

19 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

19 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

20 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

20 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

21 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

21 hours ago

This website uses cookies.