Categories: தமிழகம்

திமுக பிரமுகர் மரணத்தில் திடீர் திருப்பம் : வீட்டு வேலைக்காரனுடன் உல்லாசமாக இருக்க மனைவியே கொலை செய்தது அம்பலம்!!

நாகை : வீட்டு வேலைக்காரனுடன் உல்லாச தொடர்பை தவிர்க்க முடியாத மனைவி திமுக பிரமுகரை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அருகே வேட்டைக்காரனிருப்பு பகுதியில் உள்ள சடையன்காடு பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் திமுகவில் ஒன்றிய குழு உறுப்பினராகவும் திமுக கிளை செயலாளருமாக உள்ளார்.

இவர் தனது மனைவி சூர்யாவுடன் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் தேவேந்திரனுக்கு மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார்.

திருச்சியில் உள்ள வெல்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் கடந்த டிசம்பர் 15ம் தேதி குணமடைந்த பின் வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால் கடந்த ஜனவரி 4ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனைக்கு சென்ற போது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து தேவேந்திரனை அவரது உறவினர்கள் திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 6ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை வேட்டைக்காரனிருப்புக்கு கொண்டு வந்து மயானத்தில் வைத்து உறவினர்கள் இறுதி சடங்கு செய்துள்ளனர்.

கணவர் உயிரிழந்த துக்கம் கூட இல்லாமல் மனைவி சூர்யா தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இதை கவனித்த உறவினர் சதீஷ்கண்ணா என்பவர் சந்தேகமடைந்து சூர்யா பேசிக்கொண்டிருந்த தேவேந்திரன் செல்போனை சோதனை செய்துள்ளார்.

அப்போது தேவேந்திரன் வீட்டில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருடன் சூர்யா அதிக நேரம் பேசியதை கண்டறிந்தார். பின்னர் உறவினர்கள் சந்திரசேகரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சூர்யாவுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் துருவி துருவி நடத்திய விசாரணையில், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சூர்யா மற்றும் சந்திரசேகர் சேர்ந்து தேவேந்திரனுக்கு சாப்பிட்ட உணவில் எலி மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட தேவேந்திரன் உயிரிழந்தார்.

இதையடுத்து வேலைக்காரன் சந்திரசேகரனையும், கணவனை கொலை செய்த சூர்யாவையும் கைது செய்த போலீசார் வேதாரணியம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து இருவரையும் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

விட்டு வேலைக்காரனுடன் உல்லாசம் அனுபவிக்க தாலி கட்டிய கணவனை விஷம் வைத்து கொன்ற சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
……

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

1 day ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

1 day ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

1 day ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

1 day ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

1 day ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

1 day ago

This website uses cookies.