திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக பிரமுகர் பார்த்திபன்.
இவர் தனது வீட்டின் அருகே உள்ள விளையாட்டு திடலில் காலை சுமார் 5.30 மணியளவில் நடை பயிற்சிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்த போது அவரை இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கடந்த 17-8-23 அன்று வெட்டி கொலை செய்தது
இந்த கொலை வழக்கில் கூலிப்படையினர் கைது செய்யப்பட்ட நிலையில் கொலை வழக்கில் முக்கிய நபரான முத்து சரவணன் தலைமறைவாக இருந்த நிலையில்
போலீசார் அவரை தேடி வந்த நிலையில் மாரம்பேடு கண்டிகை பகுதியில் பிரபல
ரவுடியான காந்திநகர் அருகே உள்ள சோலையம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி முத்து சரவணன் மற்றும் ஞாயிறு சதீஷ் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணிடம் அதிமுக பிரமுகரான பார்த்திபன், சிஸ்யா பாபு இருவரையும் கொலை செய்து விடுங்கள் என்றும் இருவரையும் கொலை செய்துவிட்டு அதை கேஆர் வெங்கடேசன் ஆனந்திடம் சொல்லி முத்து சரவணன் மூலம் கொலை செய்ததாக பழியை கே ஆர் வெங்கடேஷ் மீது போட வேண்டுமென என முத்து சரவணனிடம் அசோக் என்பவர் தனது மாமா அவரிடம் பேசுவதாக தெரிவிக்கிறார்.
பார்த்திபனை கொலை செய்தால் தங்களுடைய ஆதரவு மற்றும் பண உதவி நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் தொழிலில் ஜாபர் என்பவரும் பார்த்திபனும் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் பார்த்திபன் ரவுடி முத்து சரவணனை 25 லட்ச ரூபாய் மதுரையில் பிரபல உணவகத்திற்கு சென்று காவல்துறை எஸ் பி ஜெயக்குமாரிடம் வழங்கி
முத்து சரவணனை தீர்த்துக்கட்ட உள்ளதாகவும் அதனால் பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளியை கொலை செய்ய வேண்டும் தமிழகத்தை அதிர செய்யும் வகையில் அந்த கொலை இருக்க வேண்டும் என பேசும் ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வெளியாகி உள்ள ஆடியோ குறித்தும் உண்மைகளை அசோக் அவருடைய மாமா என செல்போனில் பேசுவது பிரபல ரவுடி காது குத்து ரவியா யார் என்பது குறித்து அசோக்கிடம் உரிய விசாரணை மேற்கொண்டு பார்த்திபன் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பார்த்திபன் கொலை வழக்கில் பாஜக OBC அணியின்மாநில செயலாளர் கே ஆர் வெங்கடேசனை சிக்க வைக்க சதி திட்டம் நடத்தியவர்கள் மற்றும் கொலையில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்ய காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பார்த்திபன் கொலை வழக்கில் கூலிப்படையினர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆடியோவில் பேசும் முத்து சரவணன் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் பார்த்திபன் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக ஆடியோ வெளியாகி உள்ளதால் மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய ரவுடிகள் உள்ளிட்ட பலர் காவல் துறையினரால் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
This website uses cookies.