சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி , அம்மன்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பொன்னுசாமி, பொன்னியம்மாள் மூத்த தம்பதியினர் வசித்து வந்தனர்.
இவர்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்ட நிலையில், பொன்னியம்மாளின் கணவர் பொன்னுசாமியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் , 85 வயதான மூதாட்டி பொன்னியம்மாள் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார்.
இவருக்கு விவசாய தோட்டங்கள் உள்ளது. அதில், ஆட்களை வைத்து விவசாய பணிகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதியன்று காலையில் தோட்டத்தில் வேலை செய்ய வந்தவர்கள் , பாட்டியை காணவில்லை என்று தாரமங்கலம் ஆசிரியர் காலனியில் வசிக்கும் பேரன் கணேசனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தனது பாட்டியை காணவில்லை என்றும் கண்டு பிடித்து கொடுக்குமாறும் கணேசன் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் கடந்த 7-ம் தேதியன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் பொன்னியம்மாளின் மச்சாண்டார் பேரன் சித்துராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் சித்துராஜை அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அவரது நண்பர்கள் கருக்குப்பட்டி தனுஷ், அம்மன்கோவில்பட்டி மாரிமுத்து ஆகியோர் உதவியுடன் பொன்னியம்மாளை கொலை செய்து, பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் உடலை வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த தொளசம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, தொழிலில் நஷ்டம் அடைந்த சித்துராஜ், சின்னப் பாட்டியான பொன்னியம்மாளிடம் உள்ள பணத்தை பறிக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், மூதாட்டி பொன்னியம்மாள் பணம் கொடுக்க மறுத்ததால் , அவரை இரவு நேரத்தில் தூங்கும் போது தலையணையை வைத்து அமுக்கி, பின்னர் அடித்து கொலை செய்துள்ளார்.
பிறகு பாட்டியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, நண்பர்கள் உதவியுடன் காரில் கொண்டு சென்று ஆற்றில் வீசியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் நேற்று கைது செய்த தொளசம்பட்டி போலீசார், உடலை வீசிய இடத்திற்கு மூன்று பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் பொண்ணியம்மாளிடம் இருந்து திருடிய தோடு , மூக்குத்தி , கால் செயின் ஆகியவற்றை நகை அடகு கடையில் இருந்து குற்றவாளிகள் மூலமாக மீட்டனர்.
இதனை அடுத்து மூன்று பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் . கொலை செய்யப்பட்ட பொன்னியம்மாள், ஓமலூர் அதிமுக எம்.எல்.ஏ மணியின் சொந்த அத்தை என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.