Categories: தமிழகம்

இரட்டைக்கொலையில் திடீர் திருப்பம் : தம்பி முறை உறவினருடன் ரகசிய உறவு.. கணவர், மாமியாரை வெட்டி கொன்ற மருமகள்!!

திண்டுக்கல் : தடம் மாறும் திருமண வாழ்க்கை தம்பி முறை என்று வரும் நபருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கணவர் மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள் மற்றும் கள்ளக்காதலன் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே குருக்களையன்பட்டியில் நேற்று காலை தாய் சௌந்தரம்(62)மற்றும் மகன் செல்வராஜ் (வயது 42)மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது

சம்பவ இடத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ரூபேஸ்குமார் மீனா மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் அவரது மனைவி சுபஹாசினி கணவர் மற்றும் மாமியார் சாவில் யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்று விசாரித்து கொண்டிருந்தபோது கூட்டத்திற்குள் ஒன்றும் தெரியாதது போல் கோபிகிருஷ்ணன் இருந்துள்ளார்

சுபஹாசினி பதில் முன்னுக்கு முரணாக இருந்ததால் அவருடைய செல்போன் அலைபேசியை நோட்டமிட ஆரம்பித்தார்கள். அதிகாலை 5 மணி அளவில் வந்த தொலைபேசி அழைப்பை வைத்து விசாரணை நடத்தியதில் ஒத்தப்பட்டியை சேர்ந்த தம்பி முறை உறவான கோபிகிருஷ்ணன் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தனது கணவர் செல்வராஜ் பைனான்ஸ் தொழில் செய்து வருவதால் கோபிக்கு செல்வராஜ் 7லட்சம் ரூபாய் பணம் வாங்கி கொடுத்துள்ளார். அதனை 2லட்சத்தை திருப்பி கொடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

கள்ளக்காதல் தொடர்பால் கணவர் மற்றும் மாமியாரை கொல்வதற்கு சுபாஹசினி திட்டம் தீட்டியது தற்போது அம்பலமாகியுள்ளது. மேலும் கோபிகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தியதில் தனது நண்பர்களான வடமதுரை அருகே செங்களத்துபட்டியை சேர்ந்த ஆனந்த் மற்றும் உதயகுமார் கிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது

இரட்டைக் கொலை நடைபெற்று இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவிய நிலையில் 12மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப் பிரிவு போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

7 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

8 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

9 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

10 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

12 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

13 hours ago

This website uses cookies.