பழனி அருகே 5 மாதங்களுக்கு முன்பு தந்தையை மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற கொலை சம்பவத்தில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டி கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஓமந்தூரார் என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக மகன் கிரி விஷ்ணுவால் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரே கிரிக்கெட் மட்டையுடன் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.
ஓமந்தூரார் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக ஓமந்தூரரின் தந்தை ரங்கசாமி புகாரின் பேரில் மறு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இதனை அடுத்து தீவிர விசாரணை செய்யப்பட்டதில் ஓமந்தூரார் மனைவி பாண்டீஸ்வரி, அவரது உறவினர் கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகிய நான்கு பேர் விசாரணை செய்ததில் ஐந்து பேரும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து ஏற்கனவே ஓமந்தூராரின் 15 வயது மகன் கிரிவிஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் அவரது மனைவி உறவினர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.