பழனி அருகே 5 மாதங்களுக்கு முன்பு தந்தையை மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற கொலை சம்பவத்தில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டி கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஓமந்தூரார் என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக மகன் கிரி விஷ்ணுவால் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரே கிரிக்கெட் மட்டையுடன் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.
ஓமந்தூரார் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக ஓமந்தூரரின் தந்தை ரங்கசாமி புகாரின் பேரில் மறு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இதனை அடுத்து தீவிர விசாரணை செய்யப்பட்டதில் ஓமந்தூரார் மனைவி பாண்டீஸ்வரி, அவரது உறவினர் கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகிய நான்கு பேர் விசாரணை செய்ததில் ஐந்து பேரும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து ஏற்கனவே ஓமந்தூராரின் 15 வயது மகன் கிரிவிஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் அவரது மனைவி உறவினர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.