நடுவுல கொஞ்சம் சாலையைக் காணோம்.. திடீரென சாலை 15 அடி உள்வாங்கியதால் பரபரப்பு!!
விழுப்புரம் கும்பகோணம் சாலையில் உள்ள ஏ.கே குச்சிபாளையம் கிராமம் அருகே உள்ள மலட்டாரு பாலத்தில் விக்கிரவாண்டி கும்பகோணம் சாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அந்த பாலம் ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள அந்த சிறிய பாலத்தின் அருகே சுமார் 15 அடி அளவிற்கு சாலை உள்வாங்கியது.
ஏ. கே குச்சிபாளையம் கிராமத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்த பொழுது அந்தப் பாலத்தின் கீழே நீரோட்டத்தினால் ஏற்பட்ட மண் அனுப்பினால் திடீரென பள்ளம் ஏற்பட்டதாக அப்பகுதியில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து வளவனூர் காவல்துறையினருக்கும் நெடுஞ்சாலைத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுவரை வாகனங்கள் விபத்து ஏற்படாமல் தடுக்க அந்த கிராமத்தினர் கற்களை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
This website uses cookies.