குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்த பெண்.. தாங்க முடியாத வலி.. வயிற்றை கிழித்து தற்கொலை செய்த சோகம்!
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே மேலக்கூனியூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி. இவர் கூலி தொழிலாளியாக உள்ளார்.
இவருக்கு பிச்சம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர்.
இதனால் துரைப்பாண்டி-பிச்சம்மாள் தம்பதியர் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் பிச்சம்மாள் கடந்த சில ஆண்டுகளாக குடல் இறக்கம் நோயால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகததால் தீராத வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த நிலையில் இருந்தார்.
சம்பவத்தன்று பிச்சம்மாளுக்கு வயிற்று வலி அதிகமானது. இதனால் வலியால் துடித்த அவர் வீட்டில் இருந்த பிளேடால் தனது வயிற்றை தானே கிழித்து கொண்டார்.
இதனால் ரத்தம் பீறிட்டதால் மயங்கி விழுந்த அவர் உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, பிச்சம்மாளை மீட்டு சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பிச்சம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.