Categories: தமிழகம்

கோவையில் மருத்துவ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கோவை: திருப்பூர் சுண்டக்காப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயியான இவரது மகன் கார்த்திக்குமார் கோவை ஒத்தகால் மண்டபம் பகுதியில் தனது நண்பர்களுடன் தங்கி தனியார் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கார்த்திக்குமார் தனது நண்பர்களிடம் 2ம் ஆண்டு பாட புத்தகம் படிப்பதற்கு சிரமமாக உள்ளதாக என கூறி வந்துள்ளார். அதற்கு இவரது நண்பர்கள் போக போக சரியகிவிடும் கவலைப்பட வேண்டாம் என சமாதாம் செய்துள்ளனர்.

ஆனாலும் கார்த்திக் குமார் தேர்வில் தோல்வியடைந்து டாக்டராக முடியாமல் போய்விடுமோ என அச்சத்தில் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரியில் இருந்த கார்த்திக் குமார் தனது நண்பர்களிடம் அறைக்கு சென்று நோட்டு புத்தகத்தை எடுத்து வருவதாக கூறிச் சென்றுள்ளார்.

ஆனால் அவர் வெகு நேரமாகியும் கல்லூரிக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது கார்த்திக்குமார் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து கார்த்திக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

UpdateNews360 Rajesh

Recent Posts

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

7 minutes ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

28 minutes ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

31 minutes ago

ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?

ஸ்ருதிஹாசனின் பிரேக்கப்  கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார்.  இருவரும் லிவ்…

1 hour ago

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

2 hours ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

2 hours ago

This website uses cookies.