Categories: தமிழகம்

கணவரை கொல்ல சதி திட்டம் தீட்டிய சுந்தரி சீரியல் நடிகை : கோவையில் அரங்கேறிய பயங்கரம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் இவர் அப்பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ரமேஷ் கோவை பீளமேட்டை சேர்ந்த ரம்யா இருவருக்கும் திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா தனது தாய் பீளமேடு சென்று விட்டார். சினிமாவில் நடிக்கும் ஆர்வம் உள்ளதால் ரம்யா கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் என்கிற சந்திரசேகரருடன் பழக்கம் ஏற்பட்டு தற்போது ரம்யா சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் சீரியல் நாடகங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

ரமேஷ் இரண்டு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் பீளமேடு சென்று ரம்யாவிடம் குழந்தைகளையும் தன் தாயையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்,இதை அடுத்து ரம்யா சில தினங்கள் முன்பு ரமேஷ் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்நிலையில் ரம்யா தனது நண்பர் டேனியல் என்கிற சந்திரசேகரனிடம் தன் கணவர் குடித்துவிட்டு கொடுமை படுத்துவதாகவும் அவரை கொலை செய்ய வேண்டுமென சந்திரசேகரனிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரம்யாவும் ரமேஷும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் மோதி தான்தாக்கி கையை உடைத்து மறைத்து வைத்திருந்த ஆக்ஸாபிலைட் மூலம் ரமேஷை கை,கழுத்து. தலை பகுதிகளை தாக்கி விட்டு தப்பித்து விட்டார்.

ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் போலீசார் மொபைல் போனில் வந்த அழைப்புகள் வைத்து விசாரணை மேற்கொண்டதில் சீரியல் நடிகை தனது கணவரை கொல்ல நண்பர் மூலம் திட்டம் தீட்டியது தெரியவந்தது.

ரம்யா மற்றும் சந்திரசேகரன் ஆகியோரை கைது செய்து மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

துணை நடிகை கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

10 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

12 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

13 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

13 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

14 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

15 hours ago

This website uses cookies.