திண்டுக்கல் : பழனி அருகே தமிழக உணவுத்துறை அமைச்சர் கண்டித்து பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது புஷ்பத்தூர் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக பாஜகவை சேர்ந்த செல்வராணி மகுடீஸ்வரன் உள்ளார்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள் வரும் புஷ்பத்தூர் ஊராட்சி தலைவரை செயல்பட முடியாத வகையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் தூண்டுதலின் பேரில் காரணமின்றி ஊராட்சி மன்றத்தலைவருக்கான காசோலை அதிகாரத்தை முடக்கி வைத்து, தமிழக உணவுத்துறை அரசு அதிகாரிகள் தடுப்பதாக குற்றம்சாட்டி பாஜக சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதிகாரிகள் யாரும் வராததால் கோபமுற்ற பாஜகவினர் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் ஆயிரக்கணக்கானோர் திடீரென நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் நுழைய முடியாதபடி போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்திய நிலையில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு நுழைவாயில் கேட்டை உடைத்தும் சுவற்றில் ஏறி குதித்தும் ஒன்றிய அலுவலகத்திற்குள் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தற்பொழுது அலுவலகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துமீறி நுழைந்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2015ல் வேல்ராஜ் இயக்கத்தில்…
நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…
அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
This website uses cookies.