தமிழகம்

எதுக்கு உடனடி அமைச்சர் பதவி? செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கோர்ட் அதிரடி கேள்வி!

ஜாமீன் கொடுத்த அடுத்த நாளே அமைச்சராக பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயமானது என செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்த மனு மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்தார். பின்னர், சமீபத்தில் செந்தில் பாலாஜி ஜாமீனில் வந்தார். இவ்வாறு அவர் ஜாமீனில் வந்த அடுத்த ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றப்பட்டது.

இதனையடுத்து, செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எதிர்த்து வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவானது நீதிபதி ஏ.எஸ்.ஓகா முன்பு இன்று (டிச.02) விசாரணைக்கு வந்தது. அப்போது, “மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறது. செந்தில் பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள போது அவர் எப்படி அமைச்சராக பொறுப்பேற்க முடியும்?

அதுவும் நாங்கள் ஜாமீன் கொடுத்த அடுத்த நாளே நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயமானது? என்னதான் நடக்கிறது? சாட்சிகள் அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சத்தை இப்போது நியாயப்படுத்துவார்கள். நீதி வழங்குவது மட்டுமல்ல, அது வெளிப்படையாகவும் செய்யப்பட வேண்டும் என்பதே அடிப்படைக் கொள்கை” என்றார்.

இதையும் படிங்க: ’நான் என் கடமையைத் தான் செய்றேன்’.. ஆனால், திமுக அரசு.. இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

இதனையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. தொடர்ந்து, இதனை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Hariharasudhan R

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

19 minutes ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

23 minutes ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

49 minutes ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

1 hour ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

2 hours ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

2 hours ago

This website uses cookies.