விழுப்புரம் : பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சக்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவர் வீட்டு மனை பட்டா கோரி பதிவு செய்திருந்த நிலையில் இடத்தை அளவீடு செய்ய வட்ட சார் ஆய்வாளராக பணிபுரியும் அன்புமணி என்பவர் நிலத்தை அளவீடு செய்து பின் பட்டா வழங்குவதற்கு ஜோசப் என்பவருடன் 10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜோசப் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் தேவநாதனிடம் புகார் தெரிவித்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி அன்புமணிக்கு லஞ்சம் கொடுக்க சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜோசப் நில அளவியல் பணம் கொடுக்க அன்புமணியை தொடர்பு கொண்டபோது அவர் விழுப்புரம் சாலை கே.வி. கே. தியேட்டர் அருகே வரும்படி அன்புமணி இடம் பணம் கொடுக்கும் பொழுது ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அன்புமணியை சுற்றி வளைத்தனர்.
பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையராக (சர்வேயர்) பணியாற்றி வரும் அன்புமணி(35) விசாரணை செய்தனர். விசாரணை செய்த பின் அவரிடம் இருந்த ஆவணங்கள் நில அளவை செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நில அளவையர் அன்புமணியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் செஞ்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.