அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் ஊழல் தடுப்பு போலீசாரால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்படுவது அதிகரித்து கொண்டேயிருக்கிறது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் சின்னக்கட்டளையை சேர்ந்த விவசாயி ராமசாமி.இவருக்கு சொந்தமான நிலம் அதே கிராமத்தில் உள்ளதால், இந்த நிலத்தை முறையாக அளந்து எல்லையை நிர்ணயம் செய்து கொடுக்க, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்.
இதுகுறித்து பேரையூர் தாலுகா, குறுவட்ட சர்வேயர் ஜோதி என்பவரையும் சந்தித்து, தன்னுடைய தனது இடத்தை சர்வே செய்து கொடுக்க வேண்டும் என்று ராமசாமி கேட்டுள்ளார்.ஆனால்,ஜோதியோ, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து தாமதம் அலைக்கழித்து வந்திருக்கிறார்.
கடந்த 6ம் தேதி, ராமசாமியின் நிலத்தை அளந்துள்ளார்.ஆனாலும், அதற்கான சான்றிதழை வழங்க வேண்டுமானால் லஞ்சம் கேட்டுள்ளார்.தன்னுடைய சொந்த நிலத்திற்கு ஏன் லஞ்சம் தர வேண்டும் என்று ஆதங்கப்பட்டுள்ளார் விவசாயி ராமசாமி.அதனால் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் திட்டத்தின்படி, பேரையூர் பஸ் ஸ்டாண்டில், சர்வேயர் ஜோதியிடம் ரூ.2 ஆயிரத்தை ராமசாமி கொடுத்தார். அப்போது, அருகில் மறைந்திருந்த டிஎஸ்பி-யான சத்யசீலன் தலைமையிலான போலீஸார், ஜோதியை கையும், களவுமாக பிடித்தனர்.
தொடர் விசாரணைக்குப் பிறகு சர்வேயர் ஜோதி இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். பெண் அதிகாரி இப்படி பகிரங்கமாக கைது செய்யப்பட்டது, மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
This website uses cookies.