Categories: தமிழகம்

எதற்கும் துணிந்தவன் படக்காட்சி திடீர் ரத்து : தியேட்டர் முன் பா.ம.கவினர் ரகளை.. எதிர்ப்பு தெரிவித்த சூர்யா ரசிகர்கள்.. பதற்றம்!!

விழுப்புரம் : நடிகர் சூர்யா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் திரைப்படத்தை தியேட்டர் நிர்வாகம் ரத்து செய்தது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சரவணா தியேட்டரில் இன்று வெளியிடப்பட இருந்த நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிடக் கூடாது என பாமக செஞ்சி நகர செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் திரையரங்க நிர்வாகத்திடம் நேற்று மனு அளித்திருந்தனர்.

அந்த மனுவில் நடிகர் சூர்யா இயக்கி நடித்த ஜெய்பீம் திரைப்படம் சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் வன்னியர்களின் அடையாளமாக அக்னி கலசத்தை தவறாக சித்தரித்து படம் வெளியிட்டதாக கூறி அப்பொழுது பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஞானவேல் மன்னிப்பு கோரி சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய நிலையில் நடிகர் சூர்யா இது தொடர்பாக மன்னிப்பு கேட்கவில்லை எனவும் எனவே இன்று வெளியாக உள்ள நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிடக் கூடாது என கூறி மனு அளித்திருந்தனர்.

இதையடுத்து செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் செஞ்சி சரவணா திரையரங்கம் முன்பு இன்று காலை முதலே பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு வந்த சூர்யா ரசிகர்கள் காலை 11.30 மணிக்கு முதல் காட்சி தொடங்கி இருந்த நிலையில் திரையரங்கு முன்பு பேனர்களை ஒட்டி திரைப்படத்தை வரவேற்க ஆர்வமுடன் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த தியேட்டர் நிர்வாகமும், காவல் துறையினரும் ரசிகர்களிடம் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடவில்லை என தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா ரசிகர் தியேட்டர் நிர்வாகத்தினரிடமும் காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரசிகரை சமாதானம் செய்த போலீசார் அவரை அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட பாமகவினர் தியேட்டர் முன்பு குவிந்தனர். அப்போது அவர்களிடம் திரைப்படம் வெளியிடவில்லை என காவல்துறையினர் தெரிவித்தால் அவர்கள் கலைந்து சென்றனர்.

செஞ்சி சரவணா திரையரங்கம் முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு ரசிகர்கள் மற்றும் பாமகவினர் என அடுத்தடுத்து தியேட்டர் முன்பு குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?

அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…

23 minutes ago

வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் அடித்த நட்சத்திர ஜோடி.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டீங்களே!

சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…

31 minutes ago

வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…

யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…

1 hour ago

கசிந்த தகவல்..அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…

2 hours ago

என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…

நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…

2 hours ago

அந்த தியாகி யார்? டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கவனத்தை ஈர்த்த அதிமுக எம்எல்ஏக்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…

3 hours ago

This website uses cookies.