Categories: தமிழகம்

ஸ்கூட்டியில் வந்த 3 பேர் மீது காரை ஏற்றி கொலை செய்த மர்மநபர்கள் : இளைஞர் பலி.. விசாரணையில் SHOCK!

ஸ்கூட்டியில் வந்த 3 பேர் மீது காரை ஏற்றி கொலை செய்த மர்மநபர்கள் : இளைஞர் பலி.. விசாரணையில் SHOCK!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கஸ்தூரி பாளையம் முத்துராஜா வீதியை சேர்ந்தவர் ரவி வயது 50 . தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது மகன் அருள் பாண்டியன் வயது 28 தச்சு தொழில் செய்து வந்தார்.

இவரது நண்பர்கள் கஸ்தூரி பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் வயது 26 கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த வசந்த் வயது 26. அருண்குமார் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியிலும் வசந்த் கோவையில் உள்ள ஐடி கம்பெனியிலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அருள்பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் அருண்குமார், வசந்த் ஆகியோர் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு அதிகாலை மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் உள்ள காட்சி முனைக்கு வந்துள்ளனர்.

அதிகாலை நேரத்தில் காட்சி முனையிலிருந்து மேட்டுப்பாளையம் நகரை கண்டு ரசித்தனர். அப்போது காட்சி முனையில் ஒரு காரில் வந்த நபர்களும் இருந்தனர் அப்போது இரண்டு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

சிறிது நேரத்திற்கு பின்னர் அருள் பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் அடிவாரப்பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க: திருமணம் ஆகாத விரக்தி? விஷம் குடித்து தற்கொலை செய்த விஏஓ : கோவையில் SHOCK!

அப்போது சாலையில் வனவிலங்குகள் கடந்து சென்றதாக தெரிகிறது .உடனே இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வனவிலங்குகளை செல்போனில் புகைப்படம் எடுத்து நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது அந்த வழியே காட்சி முனையில் காரில் வந்த மர்ம நபர்களும் வந்துள்ளனர்.. இரண்டு சக்கர வாகனத்தை கார் கடந்து சென்ற பின்னர் மீண்டும் கார் திரும்பி வந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த மூன்று பேர் மீதும் காரை ஏற்றியதாக தெரிகிறது. காரை ஏற்றிய பின்னர் நிற்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அருள்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர்கள் அருண்குமார் வசந்த் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்த அருண்குமார் வசந்த் ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் உயிரிழந்த அருள் பாண்டியனின் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்..

சி சி டி வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரில் வந்த மர்ம நபர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்களை கடந்து சென்றபின்னர் மீண்டும் திரும்பி வந்து இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

காரில் வந்த மர்மநபர்கள் பிடிபட்டால் தான் இதுகுறித்து உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

1 day ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

1 day ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

2 days ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

2 days ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

2 days ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

2 days ago

This website uses cookies.