சாலையோர வியாபாரிகளை கொண்டாடும் விதமாக கோவையில் ‘ஸ்வநிதி மஹோத்ஸவ்’ என்ற தலைப்பில் சுயசார்பு சாலையோர கொண்டாட்டம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வஉசி மைதானத்தில் ஸ்வநிதி மஹோத்ஸவ்’ என்ற தலைப்பில் சுயசார்பு சாலையோர கொண்டாட்டம் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சாலையோர வியாபாரிகள் ஸ்டால்கள் அமைத்து பொருட்களை விற்பனை செய்தனர்.
குறிப்பாக சாலையோர சிற்றுண்டி உணவு வகைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்களின் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதனை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன்,மண்டல தலைவர் மீனா லோகு, மத்திய அரசின் பார்வையாளர் நிஸ்தா கக்கர்,வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மத்திய மற்றும் மாநில அரசின் கடன் பெற்று சிறப்பாக செயல்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் புதிதாக கடன் உதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டது.
தொடர்ந்து சாலையோர வியாபாரிகளின் தினந்தோறும் படும் கஷ்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த நாடகங்கள் மற்றும் நடனங்கள் அரகேற்றப்பட்டது.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.