திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (40). இவர் கடந்த 7-ஆம் தேதி இரவு சாலை கடக்க முயன்ற போது வாகன மோதி படுகாயம் அடைந்தார்.
இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகுமாரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவக்குமாருக்கு மூளை சாவு ஏற்பட்டது. இது குறித்து அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் கூறப்பட்டதோடு, உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, அவரது இருதயம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்த சிவகுமார் உடலுக்கு மருத்துவமனை நிர்வாகம் அரசு மரியாதை செலுத்தி உடலை அனுப்பி வைத்தனர்.
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
This website uses cookies.