மதுரை நத்தம் பிரதான சாலையில் துண்டாகக் கிடந்த மனிதத் தலை குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை: மதுரை மாவட்டம், நாகனாகுளம் கண்மாய் அருகேஉள்ள நத்தம் பிரதான சாலையில் உடல் இல்லாமல் தலை மட்டும் துண்டாகி கிடந்து உள்ளது. இதனை, இன்று (நவ.14) அதிகாலை, அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பின்னர், இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அங்கு கிடந்த தலையைக் கைப்பற்றினர். இந்தத் தலையை ஆய்வகத்துக்கு அனுப்பி, பின்னர் பிரேதப் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
இதனிடையே, துண்டான தலை கிடந்த இடத்துக்கு மோப்ப நாயை அழைத்து வந்த காவல் துறையினர், அந்த நாய் சென்ற வழித்தடத்தில் கிடைக்கும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் நாய் சற்று பயந்து ஓடியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நாங்கள் மட்டும் என்ன? மருத்துவர் கத்திக்குத்து விவகாரத்தின் மறுபக்கம்!
மேலும், காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், நத்தம் பிரதான சாலையில் துண்டாகிக் கிடந்த தலை 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் தலையாக இருக்கலாம் என தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, சாலையில் கிடந்த தலை யாருடையது, அவர் கொலை செய்யப்பட்டாரா, கொலை செய்யப்பட்ட நபரின் தலையைத் துண்டாக்கியது யார், அதனை இந்த சாலையில் கொண்டு வந்து போட்டது யார் என்பது குறித்து தல்லாகுளம் காவ துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.