Categories: தமிழகம்

மனுநீதி சோழனை விட சிறந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர்: குட்டிக் கதை சொன்ன அமைச்சர் எ.வ.வேலு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாக்கம், அத்தியூர், அரியலூர், வானாபுரம், எகால், ஏந்தல், பொற்பாலம்பட்டு, அவிரியூர் பெரியபகண்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டவர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது 1 மதத்திற்குள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு தமிழ்நாட்டை ஆண்ட பல்வேறு சோழ மன்னர்களில் ஒருவர் மனுநீதிச் சோழன் மனுநீதிச் சோழன் என பெயர் வர காரணம் மன்னர் ஒரு நாள் அமைச்சர்களை கூப்பிட்டு மக்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என நான் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கு ஒரு எளிய வழிமுறையை கூறுங்கள் என கூறியதாகவும் அதற்கு அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து கோட்டையின் முன்பு ஒரு மணியை வைக்க வேண்டும்.

பிரச்சனை உரிய நபர்கள் அந்த மணியை அடித்து அவர்களது பிரச்சனைகளை கூறினால் உடனடியாக அமைச்சர்கள் தரப்பு சென்று அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கலாமென அறிவுறுத்தினார்கள்.

இதனால் தான் அவருக்கு மனுநீதிச் சோழன் என பெயர் வந்தது. ஆனால் அவரை விட ஒரு படி மேலே போய் தமிழ்நாடு முதலமைச்சர் உங்களின் பிரச்சனைகளை உங்களிடமே தேடி வந்து மனுக்களாக நாங்களே பெற்றுக் கொள்ளும் வகையிலும் அவரே நேரடியாக வந்து பெரும் வகையிலும் இந்த முத்தான திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

எனவே மனுநீதிச் சோழனை விட தமிழ்நாடு முதலமைச்சர் சிறந்தவர் என இந்த குட்டி கதையின் மூலமாக விளக்கிக் கூறினார். இந்த நிகழ்ச்சியில், சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட வருவாய்த்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

12 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

13 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

14 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

14 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

15 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

15 hours ago

This website uses cookies.