தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:- நடிகர் விஜய் பல மாதங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து இப்போது தான் கட்சி கொடியையே அறிமுகப்படுத்தி உள்ளார்.இனி கட்சி கொள்கையை சில மாதங்கள் கழித்து அறிவிப்பேன் என்றும் கூறி இருக்கிறார்.
இது ஒரு அரசியல் கட்சிக்கு உகந்த செயல் இல்லை. ஏன் என்றால் அரசியல் என்பது ஆயிரம் வால்ட் பல்பு போன்று வேகத்துடன் செயல் படும் களம் என்பது நடிகர் விஜய்க்கு தெரியவில்லையா? அல்லது அவரிடம் இருக்கும் யாருக்கும் தெரியவில்லையா? என்பது புரியாத புதிராக உள்ளது. ஒரு அரசியல் கட்சி முழு வேகத்துடன் செயல் பட வேண்டும் என்றால் அதற்கு முதலில் கட்டமைப்பு தேவை என்பது கூட தெரியாமல் அரசியலில் குதித்து விட்டு ஆமை வேகத்தில் செயல்படுவதினால் தமிழக அரசியலில் ஒன்றும் சாதித்து விட முடியாது என்பது நடிகர் விஜய்க்கு தெரியவில்லை போலும்.
அரசியலில் இறங்கினால் முழு நேரமும் மக்கள் பணி மற்றும் மக்கள் சார்ந்த பிரச்சினைகள் பற்றி தினந்தோறும் பேசி ஆக்கபூர்வமான முறையில் செயல்பட வேண்டுமே தவிர தான் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்றும் தனது படம் நன்றாக ஓட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
எனவே நடிகர் விஜயை கேட்டு கொள்வது என்னவென்றால் அரசியலில் குதித்து விட்டால் முக்காடு (திரைப்படம்)போட்டு விட்டு வெளியே அலைய கூடாது முழு நேரமும் மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குரல் கொடுக்க வேண்டுமே தவிர ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போன்று செயல் பட கூடாது. மேலும் நடிகர் விஜய் முதலில் நடிப்பு பின்பு அரசியல் என்று இரட்டை வேடம் போட்டு செயல் படுவதும் வேடிக்கையாக உள்ளது. இப்படியே தொடர்ந்து பயணித்தால் தமிழ் நாட்டு அரசியலில் நடிகர் விஜய் எந்த விதத்திலும் பிரகாசிக்க முடியாது என்பதையும் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.