தமிழகத்தில் மாணவர் சேர்க்கையில் முன்னிலையில் ஆனால் கல்வியில் சிலமாவட்டங்களிலும் முன்னிலையிலும் பல மாவட்டங்கள் பின் தங்கிய நிலையிலும் உள்ளது என தமிழக ஆளுநர் ரவி கூறியுள்ளார்.
வேலூர் கோட்டையில் சிப்பாய் புரட்சி நினைவு தின கூட்டம் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டார்.
இதில் சுதந்திரபோராட்ட தியாகிகள் அவர்களின் குடும்பத்தினர் முன்னாள் ராணுவ வீரர்கள் நேதாஜி படையில் பணிபுரிந்து வீரர்கள் குடும்பத்தினர் தேசிய மாணவர்கள் படை சாரணர் இயக்கம் நாட்டுநலத்திட்ட மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போன்றவர்கள் கலந்துகொண்டனர்
இக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் ரவி கலந்துகொண்டு பேசுகையில், இந்திய சுதந்திர போருக்கு முதல் முதலில் வித்திட்ட 1806 ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி வேலூரில் தான் துவங்கியது இந்த புரட்சி ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு வெளியேற பலர் இன்னுயிர் தியாகம் செய்து ரத்தம் சிந்தி கிடைத்தது தான் இந்த சுதந்திரம்.
75 ஆம் ஆண்டில் இருக்கிறோம். இந்தியா உலக நாடுகளுக்கே வழிகாட்டியாக மாறி வருகிறது. தமிழகம் மாணவர் சேர்க்கையில் சேர்க்கை விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. ஆனால் பல மாவட்டங்களில் அது கல்வியில் பின் தங்கிய நிலையில் உள்ளது.
இந்தியா ஒரே குடும்பம் என நாம் நினைத்து செயல்பட வேண்டும். துப்புரவு தொழிலாளி முதல் உயரதிகாரி வரையில் பணியாற்றும் அனைவரும் அர்பணிப்பு உணர்வுடன் எந்த பணி ஆற்றினாலும் செயலாற்றுவது நாட்டிற்கு சேவை செய்வதை போன்றதாகும்.
ஆங்கிலேயர்கள் தான் நம்மை பிரித்தாலும் சூழ்ச்சியின் மூலம் பிரித்துவிட்டனர். குறிப்பாக வடக்கே ஆரியர்கள் தெற்கே திராவிடர்கள் என திராவிடம் என்பது மகாராஷ்டிரா, குஜராத்தில் ஒரு பகுதி, தெலுங்கானா ஆந்திரா, தமிழகம் கர்நடாக கேரளா போன்றவைகள் பூகோல ரீதியாக பிரித்தது தான் திராவிடம்.
ஆனால் இன ரீதியாக பிரிக்கப்பட்டதாக ஆங்கிலேயர்கள் தவறான வரலாற்றை பதிவு செய்துவிட்டனர். இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கே வழிகாட்டியாக அமையும் இளைஞர்கள் நாட்டு பற்றுடன் செயல்பட வேண்டும் என்று பேசினார் .
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் சார்பில் மனு அளிக்கப்பட்டது தேசிய மாணவர்கள் படையுடன் புகைப்படம் எடுத்துகொண்டு ஆளுநர் சிப்பாய் புரட்சி ஓவியங்களை பார்வையிட்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
This website uses cookies.