காஞ்சிபுரம் : உக்ரைன் நாட்டில் தவித்து வரும் தமிழக மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள மாணவர்கள் மத்திய மாநில அரசுகளிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அவளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற மாணவி உக்ரைன் நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவ படிப்பு பயின்று வருகிறார்.
இவருடன் தமிழகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமி பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர்.
ரஷ்யா நாட்டின் தொடர் தாக்குதல்களால் அப்பகுதியில் எமர்ஜென்சி நிலவி வருவதால் அங்கு வாழும் தமிழக மாணவர்களை பதுங்கு குழி போல் உள்ள கீழ்தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது கையிருப்பில் குறைந்த அளவு உணவுகள் மட்டுமே கையில் இருப்பதாகவும், உணவு தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளதாகவும் கூறுகின்றனர். உணவு இடைவேளை நேரத்தில் மட்டுமே மேல் தளத்தில் சென்று உணவு அருந்தி விட்டு மீண்டும் கீழ் தளத்திற்க்கு சென்று விடுகின்றனர்.
அப்பகுதியில் இணையதள சேவை முழுவதுமாக முடங்கி உள்ளதாகவும், போக்குவரத்து சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் வாழும் தமிழக மாணவர்கள் கூறுகின்றனர்.
மேலும் எங்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருவதாகவும் வேதனைப்படுகின்றனர். மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உக்ரைன் நாட்டில் இருந்து எங்களை மீட்டு தமிழகத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.