Categories: தமிழகம்

கேரள ஊரடங்கால் தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தம் : வெறிச்சோடிய களியக்காவிளை.. போலீசார் எச்சரிக்கை!!

கன்னியாகுமரி : கேரளாவில் இன்று இரண்டாவது ஞாயிறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லை பகுதியான களியாக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று இரண்டாவது ஞாயிறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய தேவைகளான காய்கறி , பால் உட்பட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மருத்துவம் விமான நிலையம் உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

கேரள அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் தமிழக எல்லையான களியக்காவிளையில் நிறுத்தபட்டு மருத்துவமனை, பால் காய்கறிகள் கொண்டு செல்லும் வாகனங்கள், விமான நிலையங்கள் செல்லும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கபடுகின்றனர்.

தமிழக கேரள எல்லை சோதனைசாவடியில் தமிழக போலீசார் கேரள செல்லும் தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தி அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே செல்ல அறிவுரை கூறி வருகின்றனர்.

கேரளாவில் தமிழக வாகனங்களை கேரள போலீசார் நிறுத்தி செல்லும் காரணங்களை கேட்டு உரிய காரணங்களுக்காக சென்றால் மட்டுமே அனுமதிக்கின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் எண்ணிக்கையும் குறைந்த அளவே காணப்படுகிறது.

கேரள ஊரடங்கு காரணமாக இன்று தமிழகம் ஊரடங்கு விலக்கு அறிவிக்கபட்டிருந்தாலும் தமிழக கேரள எல்லை களியக்காவிளை பகுதி வெறிச்சோடி காணபடுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

15 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

16 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

17 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

17 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

18 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

18 hours ago

This website uses cookies.