கன்னியாகுமரி : கேரளாவில் இன்று இரண்டாவது ஞாயிறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லை பகுதியான களியாக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று இரண்டாவது ஞாயிறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய தேவைகளான காய்கறி , பால் உட்பட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மருத்துவம் விமான நிலையம் உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
கேரள அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் தமிழக எல்லையான களியக்காவிளையில் நிறுத்தபட்டு மருத்துவமனை, பால் காய்கறிகள் கொண்டு செல்லும் வாகனங்கள், விமான நிலையங்கள் செல்லும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கபடுகின்றனர்.
தமிழக கேரள எல்லை சோதனைசாவடியில் தமிழக போலீசார் கேரள செல்லும் தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தி அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே செல்ல அறிவுரை கூறி வருகின்றனர்.
கேரளாவில் தமிழக வாகனங்களை கேரள போலீசார் நிறுத்தி செல்லும் காரணங்களை கேட்டு உரிய காரணங்களுக்காக சென்றால் மட்டுமே அனுமதிக்கின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் எண்ணிக்கையும் குறைந்த அளவே காணப்படுகிறது.
கேரள ஊரடங்கு காரணமாக இன்று தமிழகம் ஊரடங்கு விலக்கு அறிவிக்கபட்டிருந்தாலும் தமிழக கேரள எல்லை களியக்காவிளை பகுதி வெறிச்சோடி காணபடுகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.