தவெகவின் கொள்கைத் தலைவர்களின் சிலையைத் திறந்து வைத்து கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்கத்தை அதன் தலைவர் விஜய் கொண்டாடியுள்ளார்.
சென்னை: கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி, தனது அரசியல் கட்சி குறித்தான அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்டார், தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட வணிக நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்து, உறுப்பினர் சேர்க்கைக்கான அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார்.
மேலும், தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஆனால், விஜய் தொடங்கிய தவெகவின் கொள்கை என்னவென்று அரசியல் விமர்சகர்களும் அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்பி வந்தனர். முக்கியமாக, கொள்கையில்லா அரசியல் கட்சி என்ற விமர்சனங்களுக்கும் தவெக உள்ளானது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கட்-அவுட்களை இடம் பெறச் செய்து தனது அரசியல் கொள்கைகளை முன்கூட்டியே தெரியப்படுத்தினார்.
மேலும், தனது அரசியல் எதிரியாக திமுகவையும், கொள்கை எதிரியாக பாஜகவையும் வெளிப்படையாக அறிவித்தார். இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, ஆளுநரைச் சந்தித்து சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக்கு நேரில் சென்று பேச்சு என அரசியல் முன்னெடுப்புகளையும் கையிலெடுத்தார்.
இந்த நிலையில், கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், நிர்வாக வசதிகளுக்காக 120 மாவட்டங்களாகப் பிரித்தார். தொடர்ந்து, பல்வேறு கட்டங்களாக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.
இதையும் படிங்க: 1967, 1977 அரசியல் அதிர்வு.. 2026 தேர்தலே இலக்கு.. தொண்டர்களுக்கு விஜய் உணர்ச்சிகர கடிதம்!
இதனிடையே, மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களான ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கு, தலைமைக் கழக பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று ஓராண்டை நிறைவு செய்துள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
இதனையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வந்த விஜய், கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, தவெகவின் கொள்கைத் தலைவர்களான பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரது சிலைகளுக்குத் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.