தமிழகம்

’இந்தி இசை’..ஸ்டாலின் இப்படி செய்திருக்கலாம்.. தமிழிசை அடுக்கடுக்கான கேள்வி!

தமிழைச் சொல்லி மக்களை ஏமாற்றினோம், இனிமேலும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் (திமுக) எண்ணம் என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “விமானத்தில் நான் வந்த ஒரு மணி நேரத்திற்குள்
முதல்வர் ஏதாவது ட்வீட் போட்டு இருக்கின்றாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழுக்கு இவர்கள் மட்டுமே உரிமையானவர்கள் என்பது போல பேசுகின்றனர். பாஜகவினர் தமிழ் பற்று இல்லலாதவர்கள் என காட்ட முயல்கின்றனர். இதற்கான வெளிப்பாடுதான் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியது. ஏதாவது ஒரு காரணம் கிடைக்குமா என முதல்வர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழைச் சொல்லி மக்களை ஏமாற்றினோம், இனிமேலும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம். இன்னொரு மொழியைச் சொல்லி தமிழை யாரும் சிறுமைப்படுத்த முடியாது. மொழி அரசியலை இனிமேலாவது திமுக கைவிட வேண்டும்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்பாக இந்தி தினத்தை வாழ்த்தி பேசி விட்டு, இப்போது இந்தியை எதிர்த்து பேசுகிறார். தமிழகத்தில் தமிழில் மாணவர்கள் முழுமையாக பேசுவது இல்லை. இந்தியை எதிர்த்து விட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உருது மொழியில் எழுதுகிறார். இது மும்மொழியா? நான்கு மொழியா என்பதை அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்க வேண்டும்.

தம்பி உதயநிதி தவறுகளைத் திருத்த திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மகிழ்ச்சிதான். கோவையில் தொடர்ந்து வெடிகுண்டு புரளி வந்து கொண்டிருக்கின்ற சூழலில், இது போன்ற புரளிகளை காவல்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகளுக்கான இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளிகள் சற்று கவலை அளிப்பதாக உள்ளது என்பதால் காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வடமாநிலத்தவர்கள் தமிழ் படிக்கின்றனர், ஆனால் இங்கு ஏன் தடுக்கின்றனர்? வளரும் குழந்தைகளுக்கு மொழிகளை கிரகித்துக் கொள்ளும் தன்மை இருக்கின்றது, அதனை தடுக்கக்கூடாது.

நெல்லை நீட் பயிற்சி மையத்தில் நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்காக நீட் தேர்வை குறைசொல்ல முடியாது. நீட் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்த வேண்டும். நீட் மையம் செல்லாமலேயே மாணவர்கள் தேர்வாகி இருக்கின்றனர்.

சென்னையில் ஏதோ சிறிய மழைக்கு செய்த பணிகளை பெரிதாக பேசுகின்றனர். தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை விட்டது வரவேற்கத்தக்கது. பவன் கல்யாண் சொன்னது போல சனாதனத்தை எதிர்த்தவர்கள் காணாமல் போவார்கள் என்பதால், இந்து பயபக்தியோடு இருக்க வேண்டும்.

ஆளுநர்களுடன், முதலமைச்சர்கள் இணைக்கமான சூழ்நிலையினைக் கொண்டு வர வேண்டும். நேற்றைய விவகாரத்தில் தமிழக ஆளுநரை அழைத்து, என்ன பிரச்னை என முதல்வர் கேட்டிருந்தால் எளிதாக இந்த பிரச்னை முடிந்திருக்கும். பதவிக்கு ஏற்றபடியான உடையினை அதற்கு ஏற்றபடி அணிவதுதான் சரியாக இருக்கும்.

இதையும் படிங்க: இதுக்காகலாம் வம்புக்கு வரக்கூடாது.. ஆளுநருக்கு துரைமுருகன் பதிலடி!

இந்திக்கு ஆதரவாக பேசுவதால் என்னை கூட இந்திஇசை என விமர்சிக்கின்றனர். தமிழ் எனது பெயரில் மட்டுமல்லாது, உயிரிலும் இருக்கிறது. திமுகவைச் சேர்ந்த எத்தனை பேரின் குழந்தைகள் தமிழை படிக்கின்றனர்? தமிழ்த்தாய் வாரம் கொண்டாடப்பட வேண்டும்.

தமிழ்தாய் வாழ்த்து பாடலில் வரிகள் விடுபட்டதில் எனக்கு ஒப்புதல் கிடையாது. இதேபோல் உள்நோக்கம் இல்லாத ஒன்றை உள்நோக்கத்துடன் செய்ததாக காட்ட முயல்கின்றனர். தெரியாமல் செய்த தவறை பெரிதாக்குகின்றனர். எதையாவது பூதாகரமாகச் செய்து அரசியல் செய்ய பார்க்கும் நிலையில் போடும் இந்த இரட்டை வேடத்தை கண்டிக்கிறோம்” என்றார்.

Hariharasudhan R

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

6 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

6 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

7 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

8 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

8 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

8 hours ago

This website uses cookies.