திருமாவளவன் அம்பேத்கரை சிறப்பு செய்கிறாரா அல்லது கூட்டணியைச் சிறப்பு செய்கிறாரா என பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: சென்னையில், இன்று (டிச.06) பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தமிழிசை செளந்தரராஜன், “இன்று திருமாவளவனின் அரசியல் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய கரும்புள்ளி. அவர் அம்பேத்கரை சிறப்பு செய்கிறாரா? அல்லது கூட்டணியைச் சிறப்பு செய்கிறாரா? இரண்டு பேரையுமே தவறிழைத்தவர்களாகத் தான் நான் பார்க்கிறேன்.
நாம், எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்று முதலமைச்சர் அவரை அனுப்பி வைத்திருக்க வேண்டும். எப்படி பிரதமர் மோடி ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்தாரோ, அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலின் திருமாவளவனை அனுப்பி வைத்திருக்க வேண்டும். முதலமைச்சருக்கு பயந்துதான் திருமாவளவன் அம்பேத்கரை ஆராதிக்க திருமாவளாவன் மறுக்கிறார்” எனக் கூறினார்.
முன்னதாக, திருமாவளவன் வெளியிட்டு உள்ள விளக்க அறிக்கையில், “மாறுப்பட்ட கொள்கைகளும் முரண்பட்ட நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் பொது நிகழ்வுகளில் ஒரே மேடையில் பங்கேற்பது வாடிக்கையானது தானே. எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் தலைவர்கள் கூட ஒரே மேடையில் நிற்பதும் தவிர்க்கமுடியாதது தானே.
இதையும் படிங்க: 21 வயதில் ரெண்டு குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை…ஷாக் ஆன ரசிகர்கள்..!
என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்? நமக்கென்ன ஆதாயம் என்று கணக்குப் பார்க்காமல், நமது கொள்கை பகைவர்களின் சூது – சூழ்ச்சிக்குப் பலியாகி, அவர்களின் நோக்கம் நிறைவேற இடமளித்துவிடக் கூடாதென்கிற எச்சரிக்கை உணர்வோடு தானே நாம் முடிவெடுக்க இயலும்” எனத் தெரிவித்து இருந்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.