வேடசந்தூர் அருகே ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர் கழன்று ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன் கோட்டையில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூரை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வந்தனர்.
அப்போது, பேருந்து டயர் கழண்டு வருவதை கண்ட ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு அரசு பேருந்தை நிறுத்தி இறங்கிப் பார்த்தார். அந்த சமயம் அவர் அச்சப்பட்டதை போலவே, பேருந்தின் டயர் கழன்று இருந்தது. ஒருவேளை ஓட்டுநர் இதனை கவனிக்காமல் பேருந்தை இயக்கியிருந்தால், பெரும் விபத்து நிகழ்ந்திருக்கும் அபாயம் இருந்திருக்கும்.
இதனிடையே, பேருந்து டயர் கழன்ற நிகழ்வை அருகே காரில் பயணித்த ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளமும் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஓட்டுநர் சுதாரித்தால் 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் காயங்களில் ஏற்படாமல் தப்பிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடிய சிறுவனை ரியல் ஹீரோவான இளைஞர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சென்னை…
களைகட்டிய பாடல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…
வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 75). இவர் பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக…
வடிவேலுவின் கம் பேக் கோலிவுட்டில் டாப் காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலு, கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில்…
சினிமா பிரபலங்கள் திருமணம் செய்யாமல் கர்ப்பமான நிகழ்வுகள் அன்றைய காலம் தொட்டே வாடிக்கையாக இருந்தன. நடிகை ஸ்ரீதேவியை குறிப்பிட்டு சொல்லலாம்.…
This website uses cookies.