மக்களோட உணர்வை புரிஞ்சுக்கோங்க.. தமிழக அரசு விடுமுறை அறிவிக்கணும் : மத்திய இணையமைச்சர் எல். முருகன் குரல்!
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களுடன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கோயில்களை சுத்தப்படுத்தும் பணியினை பிரதமர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் அமைந்திருக்கும் கலாராம் கோவிலை பிரதமர் சுத்தப்படுத்தினார்.
இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் வெளி வீதிகளில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தூய்மை பணிகளை மேற்கொண்டார், முன்னதாக மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுகையில் “அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதே ஒவ்வொரு இந்தியனின் 500 ஆண்டுகள் கனவாகும், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஒவ்வொரு வீடுகளிலும் விளக்கு ஏற்ற வேண்டும், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நாம் அனைவரும் தீபாவளி பண்டிகை போல கொண்டாட வேண்டும், பாரத பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் கடுமையான விரதத்தை மேற்கொண்டு ராமர் தொடர்பான அனைத்து பகுதிகளுக்கும் பயணத்தை மேற்கொண்டு நாளை கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கோவில்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது, மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்க வேண்டும்,.
பாரதிய ஜனதா கட்சியினர் மீடியா வெளிச்சத்திற்காக கோவில்களை சுத்தப்படுத்தவில்லை கோவில்கள் அழுக்கு படிந்த நிலையில் உள்ளதால் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
தமிழக மக்களின் ஆன்மீகம் வழிபாட்டு விஷயத்தில் மக்களோடு தமிழக அரசு ஒத்துப் போக வேண்டும், ராமர் கோவில் சிறப்பை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைக்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும், ஓட்டு வங்கிக்காக மத விஷயங்களில் எதிர்மறையாக செயல்படக்கூடாது” என கூறினார்
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.